Tuesday 28 February 2012

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் - வாசிப்பு

வேலை பலு, உடல்நல குறைபாடு, சில மனக் குழப்பங்களால் ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் என்ற இந்த நாவலை படித்து முடிக்க எனக்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று.

அவரது காலத்து கிராமத்து கதை. எப்போதும் போல் சீரான தடங்கல் இல்லாத நடை. ஆனால் ஏனோ அவருக்கு கிராமத்து வழக்கங்கள் சரிவர தெரியாததாலா என்னவோ காட்சிகள் மனதிற்குள் ஒட்டவில்லை. சற்ற செயற்கை கலந்தே தோன்றுகின்றன. பாத்திரங்களும் அவர்களின் பாஷைகளும் அப்படியே தோன்றுகின்றன.

இந்த சிறு நெருடல்களை தவிர்த்து பார்த்தால் நாவல் அருமையான ஒரு பயணமாக அமைந்தது. முக்கிய பத்திரங்களான ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு, ச்பாபதி பிள்ளை ஆகியோரின் பாத்திரங்களும் அவர்கள் வழியே வழக்ககமான கதை சொல்லி வகையில் நாவலை நகர்த்தி சென்றிருப்பது அருமை. பாண்டு, கிளியாம்பாள், அக்கம்மாள் அகியோரின் வாயிலாகவும் சில இடங்களில் பேசியிருப்பதுதான் ஆச்சரியம். கிராமத்து அழகை விவரிக்க முயற்சித்து இருக்கிறார். ஏனோ என் மனதில் அந்த பாகம் சரியாக பதிய முறுக்கின்றன எனக்கு.

சபாபதி பிள்ளைக்கும் ஹென்றிக்கும்  இடையிலான உரையாடல்கள் என்னை மிகவும் கவர்கின்றன. தத்துவார்தமாகவும், நட்புடனும் அங்கே சொல்லப்படும் விஷயங்கள் அருமை. அடுத்ததாக ஹென்றி ஊருக்குள் வந்தது முதல் தான் யார் என்று தேவராஜனிடம் சொல்லும் வரை அவர்கள் இருவருக்குமான காட்சிகள் உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. துரைக்கண்ணு என்ற அந்த பத்திரம் அறிமுகத்தில் இருந்து முடியும் வரை தனது விசித்திரங்களால் வெகுவாய் கவர்கிறது. கிளியாம்பாள், அக்கம்மாள் பாத்திரங்களின் பங்கு பல இடங்களில் இருந்தாலும் பேபி என்ற அந்த பெண் பாத்திரம் நடுவில் வந்து இறுதியில் போவது ஏன் என்று தெரியவில்லை. கதையோடு ஏனோ ஒட்டவில்லை எனக்கு.

பழனியின் முடிவு தெரிந்த பின் சபாபதி பிள்ளையின் மனைவியின் நிலை என்னவாகியிருக்கும் என்ற எண்ணம் நாவலை படித்து முடித்த பின்னும் நீடிக்கிறது. பாண்டு, தர்மகாத்தா, மணியக்காரர், தேசிகன், மண்ணாங்கட்டி, கிழங்கு விற்கும் பெண் போன்ற மற்ற பாத்திரங்கள் அந்த கிராமத்தின் சூழலை விளக்குகின்றன.

ஹென்றி என்பவன் இத்தனை நல்லவனாக இருக்க முடியுமா. அவன் சொல்வதையெல்லாம் எப்படி தேவராஜனால ஏற்றுக்கொள்ள முடிகிறது. எப்படி எல்லோரும் இத்தனை நல்லவர்களாக் இருக்கிறார்கள். இந்த நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு 40 வருடத்திற்கு முந்திய ஒரு நிகழ்வை தள்ளி நின்று பார்த்த திருப்தி நிறைவாய் இருக்கிறது.

கதை என்னவோ ஒன்றும் இல்லை. ஊரை விட்டு இளைய பிராயத்தில் ஓடிப்போன ஒருவரின் சுவீகார புத்திரன் அவரது தந்தையின் பால் கொண்ட அன்பால் அந்த கிராமத்திற்கே அவரது இறப்பிற்கு பின் வந்து வாழ ஆரம்பிப்பதுதான் கதை.

அடுத்து கண்டிப்பாக மு.வ. வின் அகல் விளக்குதான்...

1 comment:

  1. ஜெகே வின் பிற நாவல்களிளிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பு இது.இதை அனுபவிக்க ஒரு விசேட மனநிலை வேண்டும்.

    அதிகம் வாசிக்கின்றீர்கள் என்பதில் மகிழ்ச்சியும் பொறாமையும்.

    அகல்விளக்கின் ஒளிக்காக காத்திருக்கிறோம்.

    ReplyDelete