Saturday 31 March 2012

மூன்று குடிமகன்கள்

எனது பயணங்களிலின்போதும் வெளியே எங்கு செல்லும்போதும் மழலைக்ளுக்கு அடுத்த படியாக நான் அதிகம் ரசிப்பது, கவனிப்பது குடிகாரர்களைதான். அவர்களின் சேஷ்டைகள், புலம்பலாக வரும் உண்மைகள், போதையை மீறி அவர்கள் தெளிவாக நடந்துகொள்ளும் திறமை என பல விஷயங்களை கவனித்து ரசித்திருக்கிறேன்.

கடந்த வார பயணங்களில் ரசித்த குடிமகன்களின் அட்டகாசங்கள். புதுவை டு விழுப்புரம். புதுவையில் இருந்த எந்த ஊருக்கு பேருந்து ஏறினாலும் நிறைய காட்சிகள் விரியும் கண்முன்னே. மதகடிப்பட்டில் அவர்கள் மூவரும் ஏறினார்கள். அவரில் ஒருவரால் நிற்கவே முடியவில்லை, இருந்தும் படிக்கட்டு பயணம் என அடம் பிடித்தார். அப்படி என்னதான் அவசரமோ அவருக்கு போவதில். நடத்துனர் மற்றும் அனைவரும் சொல்லிய பின்னர் மெதுவாக் உள்ளே வந்தார். அப்போதுதான் அனைவரும் பீல் செய்தோம். ஏண்டா அவரை உள்ளே அழைத்தோம் என்றாகிவிட்ட்து. அவரால் நிலையாய் நிற்ககூட முடியவில்லை கம்பியை பிடித்துகொண்டு அவரது இடுப்பு ஏதோ கிரண்டர் சுத்துவது போல சுத்தி சுத்தி வந்த அழகை மீதி பயணம் முழுதும் ரசித்திருந்திப்பேன். ஆனால் அருகில் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண் மீது அவரது குழற்சி இடித்ததால் பெண் இன பாதுகாவலன் வேஷம் அழைத்த்து. அண்ணே கொஞ்சம் தள்ளி நில்லுங்க என சொல்ல அவருடன் வந்த மற்ற இருவரும் சமாதானம் சொல்ல ஆரம்பித்தார்கள். கொஞ்சம் பொறுத்துக்கோங்க என்றார்கள். வழக்கமான குடிமகன்களிடமிருந்து வரும் எகத்தாளமான பதில் மிஸ்ஸிங். ஆட்களை பார்த்தால் எனக்கும் சந்தேகம். அவரும் ஆடி ஆடி. கம்பியில் சாய்ந்து, பின்னர் வழிந்து, ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பெண்ணின் மீது அமரும் நிலைக்கே போய்விட்டார். ச்ற்று சத்தம் போட்டபின் அவருடன் வந்தவர்கள் சொன்னார்கள் அவர் CBCID இன்ஸ்பெக்டராம். மற்ற இருவரும் போலீஸ்காரகள் போல. உள்ளுக்குள் பயம் கவ்வினாலும். பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தேன். அந்த பெண்ணும் வழியில் இறங்கிவிட. அங்கே அவர் உட்கார்ந்துகொண்டார். உட்கார்ந்ததும் உறங்கியும் போனார். மாதா கோவில் ஸ்டாப். அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் போலும். அவரை எழுப்பி இறங்க வைக்க முயன்றார்கள் அவர் எங்கே எழுவது. இருவரும் ஒரு 2 நிமிடம் முயன்றுவிட்டு. அவரை தனியே விட்டுவிட்டு போய்விட்டனர். நான் பேருந்து நிலையத்தில் இவரை இறக்க நடத்துனர் படப் போகும் பாட்டை எண்ணி வருந்தினேன். அடுத்த ஸ்டாப்பில் நானும் இறங்கிவிட்ட்தால் அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

அடுத்தது இரண்டும் அன்றே விழுப்புரம் டூ சென்னை பேருந்தில் நடந்த சுவாரஸ்யங்கள். வெள்ளி விடுமுறையாதலால் வழக்கத்தை விட சென்னைக்கு செல்லும் கூட்டம் அதிகம் அன்று. ஓடிப்போய் பேருந்து ஏறி வசதியாய் ஒரு இடம் பிடித்து உட்கார்ந்தேன். ஒரு அம்மா வந்து பக்கத்தில் உள்ள 2 இடமும் காலியா என கேட்டு அவரது மகனுடன் அமர்ந்தார். அமர்ந்த பின் அந்த மகனை அனுப்பி “அவனைபோய் கூட்டிகிட்டு வாடா என்றார். அவரது மூத்த பிள்ளையாக இருக்கும் என பார்த்தால், அவரது கணவர் போல அது. நல்ல போதையிலிருந்த அவரை வேறு ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு இவர்கள் அமர்ந்தார்கள். அவரோ தன்னிலையில் இல்லை. பேருந்து புறப்பட்ட சிறுது நேரத்துலெயே சாய்ந்து விழ ஆரம்பித்தார். அந்த அம்மாவுக்கோ பயங்கர கோவம் வந்தது. இவனுக்கு வேற வேலையே இல்லை என திட்ட ஆரம்பித்துவிட்டார். இரண்டாவது முறை சாய்ந்து கீழே விழுந்தார் அந்த அப்பா குடிகாரர். அவர் இரண்டு பேர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்ததால் எளிதில் சாய ஆரம்பித்தார். இதற்குமேலும் அமைதி சரிவராதென்று நான் அவர் இட்த்திற்கு போகிறேன் என்று அந்த மகனிடம் கூறினேன். அவனும் அவரை மிகவும் கஷ்டப்பட்டு எழுப்பிப் பார்த்தான். பரிதாபப்பட்ட நடத்துனர் வந்து அந்த குடிகார அப்பாவை மிரட்டி எழுப்ப எழுந்து எனது இருக்கைக்கு வந்தான். பக்கத்தில் அமரப் போன அவனை அவரது மனவி – அதான் அந்த அம்மா நகர்ந்து ஓரமா உட்காருய்யா என்று கூறி மகனை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். அங்க உட்கார்ந்து ஏதாவது கீழ விழுந்து செத்து தொலைக்க போறான்னுதான் பார்த்தேன். இங்கே விழுந்தா அடிதான் படும்னு சொல்லிட்டு தூங்கிட்டாங்க.

மூன்றாவது நபர் அதே பயணத்தின்போது திண்டிவனத்தில் ஏறினார் தனது நண்பருடன். அவரும் இரண்டு ஆளாய்த்தான் இருந்தார். மொத்தம் அவர்கள் நான்கு பேர். படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தவரை மிரட்டி துரத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கே அவர்கள் உட்கார்ந்தார்கள். பாவம் கடைசி இருக்கையில் 3 வடநாட்டவர்கள். இவர்கள் செய்வதை எதிர்த்து கேட்க முடியாமலோ அல்லது மொழி தெரியாமலோ இவர்களை சகித்துக்கொண்டு கண்டிப்பாக திட்டிக்கொண்டுதான் உட்கார்ந்திருப்பார்கள். அந்த இருவரில் ஒருவர் அதிகமான மப்பு போல உட்காரக்கூட முடியவில்லை. பேருந்து படிகட்டு அருகிலேயே படுத்துக் கொண்டார். நமக்குத்தான் திக்திக்கென்று இருந்தது. அவர் நிம்மதியாய் போதையின் மயக்கத்தில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். பல்லாவரம் வந்து அவரை பேருந்தில் இருந்து இறக்க அவரது நண்பர் படாதபாடு பட்டார் அந்த இரவு நேரத்தில்.

இப்படி நிறைய கதைகள் குடிகாரர்களின் சேஷ்டைகள். சென்ற வாரம் திரு. செந்தில் குமாருடன் தி.நகரில் டீ குடிக்கச் செல்கையில் ஒரு குடிமகள் ரோட்டை க்ராஸ் செய்ய பேருந்துக்கு நடுவே தைரியமாக இறங்கி ஓட்டுந்ரையும் அவளது கணவரையும் திட்டிவிட்டு போனதை வேடிக்கை பார்க்க நேர்ந்தது. நடக்க முடியாமல் இருக்கும் தந்தையையும் அவரது டி.வி.எஸ்50 யையும் தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு போன ஒரு சிறுவனை பார்த்து பரிதாபப்படத்தான் முடிந்தது.

இப்படியாக எனக்கும் குடிகாரர்களுக்குமான் உறவு தொடர்கிறது. நான் நிறைய அவர்களிடம் ரசிக்கின்றேன். நிறைய கற்றுக்கொள்கிறேன். அவர்கள் செய்யும் அலம்பல்களால் சில நேரங்களில் சங்கடங்கள் இருந்தாலும் நிறைய நேரங்கள் அவற்றை ரசிக்கவே செய்கிறேன். அவர்களுக்கு மட்டும் என்ன ஆசையா. அவர்களுக்கும் நியாயமான காரணங்கள் இருக்கும் குடிக்கவும் குடித்துவிட்டு அட்டகாசம் செய்யவும். யாரையும் குடிக்க வேண்டாம் என அட்வைஸ் எல்லாம் செய்யவில்லை. குடித்தால் நீங்களும் இப்படி ஏதாவது சேஷ்டைகள் செய்வீர்கள். அதை என்னைபோல யாராவது ரசித்துக் கொண்டிருப்பர்கள் என்பதை சொல்லவே இந்த பதிவு.

2 comments:

  1. ரசனையான பதிவு;அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள்..

    ஆனால் பதிவில் இருக்கும் நாற்பது சொச்ச எழுத்துப் பிழைகளைப் பார்த்தால்.. மூன்று குடிமகன்கள் குறித்து நான்காமவர் எழுதியிருப்பதாக தெரிகிறது.. :))

    ReplyDelete
    Replies
    1. எழுத்துப் பிழைகள் முடிந்த வரை திருத்திவிட்டேன் நண்பரே.. :)

      Delete