Thursday 22 March 2012

முகங்கள்

மாமா நான் அப்படி செய்வேங்களா. அதுவும் உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு மாமா செய்யப் போறேன். நீங்க எனக்காக எவ்வலவு செய்திருக்கீங்க. நான் இது கூட செய்ய மாட்டேனா மாமா. இந்த பத்திரிக்கை வைக்கறதுல வேலையா இருந்துட்டேன் மாமா. தினமும் ராவுக்குதான் வீட்டுக்கு வரேன். காலங்காத்தால எழுந்து போயிடறேனா அதான் அவனை பார்க்க முடிய்லை மாமா. நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத மாமா. இன்னைக்கு கண்டிப்பா போய் அவனை பார்த்து உழவு ஓட்டிட்ட்டானான்னு கேட்டு உனக்கு சொல்லறேன் மாமா. இல்லை மாமா அன்னைகே ஓட்டறேன்னுதான் சொன்னான் மாமா. கண்டிப்பா இன்னைக்கு ராவுக்கா கேட்டுட்டு உன்கிட்ட சொல்லறேன் மாமா.

டேய் மாப்ளே. அந்த பெருசு போன் செஞ்சுதுடா. உழவு ஓட்டினியாடா. செஞ்சிருக்க மாட்டியே மாப்ளே நீ. தெரியும்டா எனக்கு. அப்படி இல்லைடா. என்னவோ அவன் வீட்டு வேலைக்காரன் மாதிரியே வேலை வைக்குதுடா அது. என்ன செய்யட்டும். நமக்கு எதுக்கும் பிர்யோஜனம் இல்லாட்டியும் இத மாதிரி இம்ச பண்றதுல ஒன்னும் குறைச்சல் இல்ல. இருக்கிர இடத்துல இருந்துகிட்டே எல்லா வேலையையும் முடிக்கனும்னு பார்க்கறாரு. உனக்கும் வேலை இருக்கு. சரிடா மாப்ளே ஒரு இரண்டு நாள்ல ஓட்டிடுவன்னு சொல்லிடறேன். நேரம் கிடைக்கும் போது ஓட்டிடுடா. கூலிய ஆத்தாகிட்ட குடுத்துட்டு வந்த முந்தாட்நேத்து கொடுத்துதா. பெருசு திரும்ப போன் செஞ்சா நான் சொல்லிடறேன். உனக்கு போன் செஞ்சாலும் சொல்லிடுடா மாப்ளே. ஏதாவது குழப்பிடாத. போனை வச்சிடட்டுமாடா. சனிக்கிழமை கச்சேரி வச்சுக்குவோம் மாப்ளே. பஸ் சவுண்டல ஏதும் கேட்கலைடா. சரிடா மாப்ளே.

4 comments:

  1. ருவிட் தான் சுவாரசியம் என்றால் இதுவும் ரொம்ப நல்லாயிருக்கே...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு...

    முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே... உங்கள் பதிவு அருமை :)

      Delete